sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா


ADDED : மார் 05, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 04:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: அரங்கனுாரில் அய்யா வைகுண்டர் சுவாமியின் 193வது அவதார தின விழா நடந்தது.

பாகூர் அடுத்துள்ள அரங்கனுார் எரமுடி அய்யனார் கோவில் அருகே அய்யா வைகுண்டர் புதுவைப்பதி கோவில் அமைந்துள்ளது. இங்கு, அய்யா வைகுண்டர் சுவாமியின் 193வது அவதார தினவிழா நேற்று நடந்தது.

காலை 6.00 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமிக்கு, பால் வைத்தலும், காலை 6.30 மணிக்கு புதுக்குப்பம் கடற்கரையில் இருந்து கடல் பதம் (தீர்த்தம்) கொண்டு வரப்பட்டது. காலை 8.00 மணிக்கு உகபடிப்பு, 12.00 மணிக்கு வைகுண்ட சுவாமிக்கு பணிவிடை மற்றும் உச்சி படிப்பு நிகழ்ச்சி நடந்தது.

பவர் சோப் நிர்வாக இயக்குனர் தனபால் அன்னதானம் வழங்கினார்.

மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டருக்கு பால் வைத்தல் நிகழ்ச்சி, 5.00 மணிக்கு உகபடிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, அய்யா வைகுண்டர்பதி அய்யாவழி பக்தர்களும், கிராம மக்களும் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us