/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா
/
வன்னிபெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை விழா
ADDED : ஜூன் 02, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் உள்ள அலர்மேல் மங்கை சமேத சீனிவாசப் பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை மாகோற்சவ திருப்பணி தொடக்க விழா நேற்று பூஜையுடன் துவங்கியது.
அதையொட்டி, மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து ஹோமம் நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு முதல் கால ஹோமம், மதியம் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை இரண்டாம் கால ஹோமம் நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால ஹோமம், 10:00 மணிக்கு கும்பங்கள் புறப்பாடு, 10:30 மணிக்கு பாலாலய பிரதிஷ்டை சாற்றுமுறை நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் செய்து வருகிறார்.