/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வக்கீல் சங்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
/
வக்கீல் சங்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
ADDED : ஜூன் 11, 2024 05:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க தேர்தல் நடந்தது.
புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வாக்கு பதிவு காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை நடந்தது. அதில், 1,033 வக்கீல்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதில், தலைவர் பதவிக்கு அண்ணாதுரை, பாலசுந்தரம், பச்சையப்பன், ரமேஷ், சாய் ராஜகோபால், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி செந்தில்குமார் பணியாற்றினார்.