ADDED : ஜூன் 25, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் வேப்பமரத்தில் பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.
காரைக்கால் முரசொலி நகரை சேர்ந்த ஆறுமுகன் மகன் வெங்கடேஷ், 29; இவர் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் காரைக்காலுக்கு சொந்த வேலையாக சென்று விட்டு வீட்டிற்கு அவரது பைக்கில் நெடுங்காடு மேலகாசாக்குடி சாலையில் சென்றார். அப்போது நிலைத்தடுமாறி பைக் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேைஷ அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தகவல் அறிந்த நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.