நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பைக் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் காமராஜ் வீதியை சேர்ந்தவர் சிவசுந்தரம், 35; தனியார் மால் ஊழியர். கடந்த 27ம் தேதி பணியை முடித்து சென்றவர் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.