sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதமர் சாதனைகளை கூறி பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

/

பிரதமர் சாதனைகளை கூறி பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

பிரதமர் சாதனைகளை கூறி பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு

பிரதமர் சாதனைகளை கூறி பா.ஜ.,வினர் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 17, 2024 11:53 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : குறிஞ்சி நகர் மற்றும் ஜீவானந்தபுரம் பகுதியில், உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் தண்டபாணி தலைமையில், பூத் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் தண்டபாணி பேசும்போது, 'இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் நலத்திட்டங்களை பெற்றிருக்கின்றனர்.ஆனால், பொய்யான வாக்குறுதிகளை சொல்லிசில கட்சியினர்ஓட்டு கேட்கின்றனர்.

லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் கீழ், தரமான சிமென்ட் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மோடிமீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய நாடுஅதீத வளர்ச்சியை அடையும்.புதுச்சேரியில் நமச்சிவாயம் வெற்றி பெறுவதன் மூலம் லாஸ்பேட்டை தொகுதி அனைத்து வகையிலும் வளர்ச்சி பெறும் எனபேசிஓட்டு சேகரித்தார்.கூட்டத்தில், பா.ஜ., மாநில மகளிர் அணி தலைவர் ஜெயந்தி, கிளை தலைவர்கள் வெண்ணிலா, மணிகண்டன், குமாரி, ஜீவானந்தபுரம் பா.ஜ., நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், பரசுராமன், பெருமாள், தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us