/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் முதல்வருக்கு பா.ஜ., பிரமுகர் கண்டனம்
/
முன்னாள் முதல்வருக்கு பா.ஜ., பிரமுகர் கண்டனம்
ADDED : ஏப் 10, 2024 03:44 AM
புதுச்சேரி : அரசியல் லாபத்திற்காக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அபாண்டமாக பொய் குற்றச்சாட்டு கூறி உள்ளதாக, பா.ஜ., பொருளாதார பிரிவு தலைவர் பிரபாதேவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நான் காமாட்சி ஓட்டலில், பிரியாணி சாப்பிடும்போது அதில், கரப்பான்பூச்சி கிடந்தது. அதை சாப்பிட்டதால் மயக்கம் ஏற்பட்டு இரு நாட்கள் சிகிச்சை பெற்றேன். இதுகுறித்து, புகார் தெரிவித்து, 2 நாட்களுக்கு பின் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.பெண் என்றும் பார்க்காமல் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி இருக்கிறார். ஓட்டல் நிர்வாகத்திற்கு ஆதரவாக, குற்றச்சாட்டு கூறியதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

