sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.ஆர்.காங்., உடனான கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திட்டவட்டம்

/

என்.ஆர்.காங்., உடனான கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திட்டவட்டம்

என்.ஆர்.காங்., உடனான கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திட்டவட்டம்

என்.ஆர்.காங்., உடனான கூட்டணி சட்டசபை தேர்தலிலும் தொடரும் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா திட்டவட்டம்


ADDED : ஜூலை 09, 2024 04:11 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : என்.ஆர். காங்., உடனானா கூட்டணி 2026 சட்டசபை தேர்தலிலும் தொடரும் என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

அதிருப்தி எம்.எல். ஏ.,க்களை சந்தித்த பின் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:

புதுச்சேரி லோக்சபா தொகுதியில் முதல்முறை யாக கூட்டணியுடன் பா.ஜ., தேர்தலை சந்தித்தது.

ஆளும் கட்சியாக இருப்பதால் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.

இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என புதுச்சேரி மக்கள் சிக்னல் கொடுத்துள்ளனர். எனவே மக்கள் பிரதிநிதிகள், கட்சியினர், அந்தந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை களைய சொல்லியுள்ளோம்.

தேர்தலில் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., வினர் கடுமையாக தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.

இதன்மூலம் 2 லட்சத்து 89 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இதுவும் ஒரு வகையில் சாதனை தான்.

கடந்த முறை 9 தொகுதிகளில் தான் போட்டியிட்டோம். இம்முறை பா.ஜ., வின் சின்னத்தை புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் கொண்டு சென்று சேர்த்துள்ளோம். எதிர்கட்சிகளான காங்.,-தி.மு.க., பொய் பிரசாரம் மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம். அதன்பிறகு கட்சியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்வர், அமைச்சர்கள் மீது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்தாக எனக்கு தெரியவில்லை.

தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, மத்திய அரசு புதுச்சேரிக்கு கூடுதலாக வளர்ச்சி திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். என்.ஆர்.காங்.,உடனான கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும், அதன் பிறகும் தொடரும் என்றார்.

அப்போது, பா.ஜ., தலைவர் செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கூட்டணியில் இருந்தே கொண்டே பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.








      Dinamalar
      Follow us