sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசார் மீது பா.ஜ.,வினர் புகார் மனு

/

போலீசார் மீது பா.ஜ.,வினர் புகார் மனு

போலீசார் மீது பா.ஜ.,வினர் புகார் மனு

போலீசார் மீது பா.ஜ.,வினர் புகார் மனு


ADDED : ஜூன் 04, 2024 05:06 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிரதமர் மோடி குறித்து சமூகவலைதளத்தில் அவதுாறு பரப்பிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி சீனியர் எஸ்.பி.,யிடம் பா.ஜ., வினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து பா.ஜ., ஊடகப்பிரிவு மாநில துணைத் தலைவர் விமல் ஈஸ்வர் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது.

புதுச்சேரி போலீசில் பணியாற்றும் ஒருவர் தனது சமூக வலைத் தளத்தில் பிரதமர் மோடி, அயோத்தி பாலராமர் , மத்திய அமைச்சர்கள், முன்னாள் கவர்னர்கள் குறித்து தொடர்ந்து அவதுாறு பதிவுகளை பதிவிட்டு உள்ளார்.

மேலும், தற்போது லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, தமிழகத்தின் விவேகானந்தா மண்டபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட தொடர் 45 மணிநேர தியான நிகழ்ச்சியை அவமதிக்கும் வகையிலும் அந்த பதிவுகள் அமைந்துள்ளது.

ஆகையால், தொடர்ந்து தேச விரோத மற்றும் அரசு விரோத செயல்பாடுகளை செய்து வரும் போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது சமூக வலைத்தள பக்கத்தினை முடக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us