ADDED : மார் 09, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியில் அழுகிய நிலையில் 4 வயது சிறுவன் உடல் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. நேற்று மாலை கந்தகுமாரன் கிராமம் அருகே, வீராணம் ஏரி கரையோரம், அடையாளம் தெரியாத சிறுவன் உடல் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் புத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சிறுவனுக்கு 4 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இறந்த சிறுவன் யார், எப்படி இறந்தான் என மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.