ADDED : ஆக 06, 2026 04:55 PM
புதுச்சேரி: உலக தாய்ப்பால் வராத்ததை முன்னிட்டு, இந்திய பெரன்டரல் மற்றும் என்டர்னல் நியுட்ரிஷியன் புதுச்சேரி கிளை மற்றும் செஞ்சிலுவை சங்கம் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா வரவேற்றார்.செஞ்சிலுவை சங்க புதுச்சேரி தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கி வைத்தார். ஜிப்மர் உணவு நிபுணர் உமாசங்கரி, ‘உலக தாய்ப்பால் வாரத்தின் அவசியம், தாய்ப்பாலின் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதன் பங்கு’ குறித்து சிறப்புரையாற்றினார். கம்பன் கலையரங்கில் துவங்கிய ஊர்வலம் பாரதி பூங்கா அருகில் நிறைவடைந்தது. ஊர்வலம் மணக்குள விநாயகர், ராக் செயவிலியர் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். செஞ்சிலுவை சங்க கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் செய்திருந்தார். உமாசங்கரி நன்றி கூறினார்.
