ADDED : மே 27, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வேலைக்கு செல்லாமல் இருந்த கொத்தனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை, ரோடியார்பேட் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் மகன் செல்வம், 24; கொத்தனார.் குடி பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
