ADDED : மே 09, 2026 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரயில் மோதி கொத்தனார் இறந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் விநாயகம், 58; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை 6:15 மணியளவில் 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் ரயில் பாதையை கடக்கும் போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

