/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்
ADDED : மே 26, 2024 05:03 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை நாளை துவங்குகிறது.
முதன்மை பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா நாளை (27.05.2024) துவங்குகிறது. முகாம் வரும் 30ம், தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.
மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் அலுவலகம் அருகில், கரியமாணிக்கம், கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில், மதகடிப்பட்டு, வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய, தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம்.
புதிய எப்.டி.டி.எச் இணைப்பு ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு, ரூ.999,க்கு கிடைக்கும்.
ரூ.269 மதிப்புள்ள சிம்கார்டு, ரூ.50க்கு கிடைக்கும். இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு, 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம்.
பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல் வருபவர்களுக்கு, ரூ.269, மதிப்புள்ள சிம் இலவசம். தற்போதுள்ள, 2ஜி மற்றும் 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக, 4ஜி, சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.