/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது கார் மோதல் கணவர் பலி: மனைவி படுகாயம்
/
பைக் மீது கார் மோதல் கணவர் பலி: மனைவி படுகாயம்
ADDED : ஜூன் 13, 2024 08:19 AM
கிள்ளை : திண்டிவனம் சந்தைமேட்டுத் தெருவை சேர்ந்தவர்மணிகண்டன்,40; இவரது, மனைவி பிரேமலதா,30; இருவரும் நேற்று முன்தினம்பைக்கில், கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்குபுறப்பட்டனர். சி.முட்லுார் மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்தகார் மோதியது.
அதில் படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டுசிதம்பரம் அண்ணாமலைநகர் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காகமணிகண்டன்,புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார். இதுகுறித்துகிள்ளை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.