/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 01, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காலாப்பட்டு அடுத்த பிள்ளைசாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி மகாலட்சுமி, 26; கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை உள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், ரகுபதி, அவரது தாய் நாகவல்லி, சகோதரன் ரகுராமன், சகோதரி சுகணா ஆகியோர் மகாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து ரகுபதி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.