ADDED : ஏப் 02, 2024 03:54 AM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே ஓட்டுக்கு பணம் பட்டு வாடா செய்த தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட செங்கனாங்கொல்லை கிராமத்தில் நேற்று முன்தினம் காலை தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப்போட பொதுமக்களுக்கு தலா 100 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வீடியோ வைரலானது.
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த புஷ்பராணி கொடுத்த புகாரின் பேரில் செங்கனாங்கொல்லை தி.மு.க., பிரமுகர் கோவிந்தராஜ், 55; மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
