/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணுக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு
/
பெண்ணுக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு
ADDED : மே 21, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாவணர் நகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பாவணர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி, 50; நேற்று முன்தினம், காந்திமதியின் வீட்டின் வாசலில், பக்கத்து வீட்டில் வசிக்கும் அப்பாஸ், 19; குடிபோதையில் படுத்து துாங்கினார்.
இதனை காந்திமதி தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பாசுடன் அவரது உறவினர்கள் முருகன், 19; சிவா, 19; ஆகியோர் சேர்ந்து காந்திமதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் அப்பாஸ், முருகன், சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

