தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணுக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு

பெண்ணுக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு


ADDED : மே 21, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாவணர் நகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி பாவணர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி, 50; நேற்று முன்தினம், காந்திமதியின் வீட்டின் வாசலில், பக்கத்து வீட்டில் வசிக்கும் அப்பாஸ், 19; குடிபோதையில் படுத்து துாங்கினார்.

இதனை காந்திமதி தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பாசுடன் அவரது உறவினர்கள் முருகன், 19; சிவா, 19; ஆகியோர் சேர்ந்து காந்திமதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் அப்பாஸ், முருகன், சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us