/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டு உரிமையாளரை தாக்கிய பெண் மீது வழக்கு
/
வீட்டு உரிமையாளரை தாக்கிய பெண் மீது வழக்கு
ADDED : ஏப் 09, 2024 11:18 PM
புதுச்சேரி : கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 43; இவரது வீட்டை, பவுஜினா பேகம் என்பவருக்கு வாடகை விட்டுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக வாடகை தராததால், வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். ஆனால், அவர் வீட்டை காலி செய்யாததால் சதீஷ்குமாரின் மனைவிக்கும், பவுஜினா பேகத்திற்கு தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த பஷஜினா பேகம், சதீஷ்குமாரின் மனைவியை தாக்கினார். அதில், அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, அவர் புகார் கொடுத்தார். அதே போன்று, பவுஜினா பேகம், வெளியில் வைத்திருந்த சி.சி.டி.வி., உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக சதீஷ்குமாரின் மீது புகார் அளித்தார்.
முத்தியால்பேட்டை போலீசார் இரு தரப்பு புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

