தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளையில் ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 06, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் சந்திப்பு அருகே  ரகளையில் ஈடுபட்ட கடலுார் சொத்திக்குப்பத்தை ராஜவேலு 36;  கரையாம்புத்துார் ஏரிகரை சாலையில் ரகளையில் ஈடுபட்ட கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் 24; ஆகியோரை  போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.  இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, முள்ளோடை சந்திப்பு அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட தேவனாம்பட்டினம் செல்வக்குமார் 31; நரம்பை கடற்கரை பகுதியில் ரகளை செய்த வம்பாபேட் சுந்தரேசன் 39; ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us