sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி தேர் திருவிழா

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி தேர் திருவிழா

வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி தேர் திருவிழா

வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி தேர் திருவிழா


ADDED : ஜூன் 19, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி தேர் திரு விழா நடக்கிறது.

வில்லியனுார், பெருந்தேவியார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 20,வது ஆண்டு தேர் திருவிழா கடந்த, 12,ம் தேதி துவங்கியது.

இதைத்தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், கருட வாகனத்திலும், நேற்று யானை வாகனத்திலும் சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்குஅருள் பாலித்தார்.

இந்த நிலையில் வரும் 21,ம் தேதி, காலை 6:00 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்கிறது. திருக்கோவிலுார், 26வது பட்டம் தேகளிச ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து துவங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் பங்கேற்கவும் உள்ளனர்.

மேலும், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.பி.,க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், இந்து சமய நிறுவன செயலர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர், இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த தேர் உற்சவம் வரும், 25,ம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us