/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலனை முதல்வர் ரங்கசாமி விளக்கம்
/
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலனை முதல்வர் ரங்கசாமி விளக்கம்
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலனை முதல்வர் ரங்கசாமி விளக்கம்
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலனை முதல்வர் ரங்கசாமி விளக்கம்
ADDED : ஆக 29, 2024 07:27 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பது குறித்த அரசு பரிசீலித்து வருகிறது என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி இந்திரா நகரில், இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. இங்கு படிக்கும் மாணவ-மாணவியருக்கு, இலவச மடிக்கணினி-149 ; இலவச மிதிவண்டி-51 ; மற்றும் இலவச மழை உடை- 59, ஆகியவை வழங்கப்பட்டன. இதை, முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் ரமேஷ் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, 157 பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. மற்ற பள்ளிகளும் விரைவில் மாற்றப்படும்.அரசு சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல, முத்திரையர் பாளையம், இளங்கோ அடிகள் அரசு பள்ளியில், 199 மாணவர்களுக்கு இலவச லேப்டாப், 47 பேருக்கு இலவச மழை உடை, 47 பேருக்கு சைக்கிள் ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சி முடிந்த பின் முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறும்போது, ''மாணவர்களுக்கு வழங்கப்படும் மதியம் உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் இருப்பதால், அது வித்தியாசமாக, சுவையாக உள்ளது.
மாணவர்களும் நன்றாக இருக்கிறது என்று கூறினர். மின் கொள்முதல் அதிகரித்துள்ளது. பொதுமக்களை பாதிக்காத வகையில் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மாநில அரசு, மானியம் மூலம் குறைப்பதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.