/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுக்க தலைமை செயலர் உத்தரவு
/
டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுக்க தலைமை செயலர் உத்தரவு
டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுக்க தலைமை செயலர் உத்தரவு
டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுக்க தலைமை செயலர் உத்தரவு
ADDED : மார் 02, 2025 06:55 AM
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் நீண்ட நாட்களாக உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
இது தொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வரும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி, பணிக்கு வராத அரசு ஊழியர்களை உடனடியாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
அவசரமாக லீவு தேவை என்று விடுமுறை எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு வருவது கிடையாது. அரசு துறைக்கும் ரிப்போட் செய்வது கிடையாது. சிலர் வெளிநாடு செல்ல லீவு எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகிவிடுவது உண்டு.
சிலர் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய துறைக்கு செல்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைவதும் உண்டு. எனவே அரசு துறைகள் முழுவதுமாக பட்டியலை திரட்டி ஒப்படைக்க நிர்வாக சீர்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகளின் நீண்ட காலமாக பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். அந்த விளக்கம் திருப்தி இல்லாதபட்சத்தில், பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும்.
அவரின் பணிக்காலம் ரத்து செய்யப்படும். உதாரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி சீனியாரிட்டி பட்டியலில் இருந்தாலும், அந்த பணிக்காலம் முழுதும் ரத்து செய்யப்படும். புதிதாக சேர்ந்த ஊழியர் போன்ற கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

