sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாட்டு கச்சேரியில் மோதல் தீ வைத்து பைக் எரிப்பு

/

பாட்டு கச்சேரியில் மோதல் தீ வைத்து பைக் எரிப்பு

பாட்டு கச்சேரியில் மோதல் தீ வைத்து பைக் எரிப்பு

பாட்டு கச்சேரியில் மோதல் தீ வைத்து பைக் எரிப்பு


ADDED : செப் 04, 2024 07:45 AM

Google News

ADDED : செப் 04, 2024 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பைக்கை தீ வைத்து எரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே ராஜா நகரில் ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழாவை அப்பகுதி மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த பத்வா (எ) பத்மநாபனை திருவிழாவிற்கு அழைக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் பாட்டு கச்சேரி நடந்தது. அப்போது, பத்மநாபன் அவரது நண்பர்கள் விக்கி, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் மூவரையும் கண்டித்து அனுப்பினர்.

இந்நிலையில் அதிகாலை 3:00 மணிக்கு கோவில் விழா மேடை அருகே வந்த பத்மநாபன், விக்கி, தமிழ்செல்வன், விழா மேடை அருகே இருந்த சேர்களை அடித்து உடைத்து வீசியதுடன், அங்கிருந்த பைக்கை தீ வைத்து எரித்தனர். அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us