ADDED : ஆக 07, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பனித்திட்டு மகா கங்கையம்மன் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மகாசக்தி கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 13ம் தேதி மதியம் 12:00 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.