: தெரு நாய்கள் தொல்லை: மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
நீலகண்டன், மேட்டுப்பாளையம்.
–––––––––––––––––––––––––––––––––––––––––––
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் – காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராஜ்குமார், புதுச்சேரி.
––––––––––––––––––––––––––––––––––––––––––––
மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் சாலையிலேயே மது குடிப்பதால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
குமார், தட்டாஞ்சாவடி.
––––––––––––––––––––––––––––––––––––––
மின் விளக்கு எரியவில்லை: அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.
கபிலன், அரியாங்குப்பம்.
––––––––––––––––––––––––––––––––––
சாலையில் மீன் கடைகள் : உப்பளம் செல்லும் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மாணிக்கம், உப்பளம்.
–––––––––––––––––––––––––––––––––––––

