ADDED : ஜூன் 01, 2026 05:21 PM
: கழிவுநீர் தேங்கி நிற்கிறது:
பிருந்தாவனம் விநாயகர் கோவில் வீதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
காந்தி, புதுச்சேரி.
––––––––––––––––––––––––––––
நாய்கள் தொல்லை: புதுச்சேரி கடற்கரை சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மாலா, புதுச்சேரி.
––––––––––––––––––––––––––––––––
வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: ரெட்டியார்பாளையம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாணிக்கம், ரெட்டியார்பாளையம்.
––––––––––––––––––––––––––––––––––––
சாலையில் மீன் கடைகள்: உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது.
பாரதி, உப்பளம்.
––––––––––––––––––––––––––––––––––––
குண்டும்: மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கணபதி, புதுச்சேரி.
