sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அலுவலக சொத்துக்கள் ஜப்தி; ஓய்வு பெற்ற ஊழியர் பெற்ற கடனால் வந்த வினை

/

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அலுவலக சொத்துக்கள் ஜப்தி; ஓய்வு பெற்ற ஊழியர் பெற்ற கடனால் வந்த வினை

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அலுவலக சொத்துக்கள் ஜப்தி; ஓய்வு பெற்ற ஊழியர் பெற்ற கடனால் வந்த வினை

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அலுவலக சொத்துக்கள் ஜப்தி; ஓய்வு பெற்ற ஊழியர் பெற்ற கடனால் வந்த வினை


ADDED : செப் 10, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக அலுவலக அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது.

புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. நடேசன் நகரில் உள்ள புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக பல்நோக்கு ஊழியர். இவர், அரியூர் அங்கன்வாடியில் பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீராம்சிட்ஸ் பைனான்ஸில் சீட்டு கட்டி ரூ. 8.50 லட்சம் கடன் பெற்றார். அதற்கான மாத தவணை தொகையை 2013 வரை கட்டினார். அதன்பிறகு மாத தவணை செலுத்தவில்லை.

ஆர்பிடேஷன் கமிட்டி, விஜயலட்சுமி வட்டியுடன் கடன் தொகை சேர்த்து ரூ. 13 லட்சம் திருப்பி தர அறிவுறுத்தியது. அதனையும் விஜயலட்சுமி தரவில்லை. இதனால் ஆர்பிடேஷன் உறுதி செய்த உத்தரவை நிறைவேற்ற புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விஜயலட்சுமியின் சம்பளத்தை பிடித்தம் செய்து நீதிமன்றத்தில் செலுத்த கடந்த 2014ம் ஆண்டு புதுச்சேரி தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை பெற்று கொண்ட மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகம், விஜயலட்சுமியின் சம்பளத்தை பிடித்தம் செய்யவில்லை.

கடந்த 2018 ம் ஆண்டு விஜயலட்சுமி பணி ஓய்வு பெற்றார். அப்போது, பணி கொடைகளையும் நிறுத்தி வைக்கவில்லை. இதனால் தனியார் பைனான்ஸ் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசேகரன், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கோர்ட் அமீனா ஜெய அம்பி, பைனான்ஸ் நிறுவன வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் நேற்று நடேசன் நகரில் உள்ள மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக அலுவலக அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய சென்றனர். அலுவலக ஊழியர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து, ஜப்தி செய்ய வேண்டாம் என மறுத்தனர். ஆனால் கோர்ட் உத்தரவுப்படி அலுவலக அசையும் சொத்துக்களான கம்யூட்டர், மேஜை உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us