ADDED : மே 13, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் பகுதி கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய் யப்பட்ட குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, திருக்கனுார் வணிகர் வீதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.12,000 மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடையின் உரிமையாளர் முஜிபுர் ரகுமான், 45; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.