/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் வேதாம்பிகை அம்மனுக்கு 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை
/
பாகூர் வேதாம்பிகை அம்மனுக்கு 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை
பாகூர் வேதாம்பிகை அம்மனுக்கு 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை
பாகூர் வேதாம்பிகை அம்மனுக்கு 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை
ADDED : மே 11, 2024 04:54 AM
பாகூர்: அக்ஷய திருதியை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள வேதாம்பிகை அம்மனுக்கு 1008 தாமரை மலர்களால் நேற்று சிறப்பு அர்ச்சனை நடந்தது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்ஷய திருதியை, மற்றும் அக்னி நட்சத்திரத்தையொட்டி, தெற்கு திசை பார்த்து அருள்பாலித்து வரும் வேதாம்பிகையம்மனுக்கு நேற்று 1008 தாமரை மலர்களால் சிறப்பு அர்ச்சனை நடந்தது.
நேற்று மாலை 5.00 மணிக்கு பால், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் வேதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.