sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

/

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு


ADDED : செப் 09, 2024 04:52 AM

Google News

ADDED : செப் 09, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமின்றி பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் விழித்துக் கொள்ள பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு குற்றம் சம்பவங்களை தடுக்காலம் என, பெண் ஒருவர் டிப்டாப் உடை அணிந்து பேசும் வீடியோ ஒன்றை சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் கூரியர் மூலமாக போதைபொருட்கள், ஆயுதங்கள் அனுப்பியதாகவும், சிம்கார்டுகள், ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மும்பை போலீசார், போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் பேசுவதாக கூறி மிரட்டி ஆன்லைன் மோசடி பணத்தை பறிக்கிறார்கள்.

இதுபோல் யார் மிரட்டினாலும் பயப்பட வேண்டாம். ஆன்லைன் செயலியை பயன்படுத்த கூடாது.

சமூக வலைதள பக்கத்தில் பெண்கள் ஆபாசமாக தோன்றி அதனை வீடியோ எடுத்து பதிவு செய்து வைத்து பணம் கேட்டு மிரட்டுவார்கள். அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் எந்தவொரு வீடியோ அழைப்பையும் ஏற்க வேண்டாம் உள்ளிட்ட தகவல்கள் அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us