sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.12.86 லட்சம் மோசடி  மர்ம நபர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

/

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.12.86 லட்சம் மோசடி  மர்ம நபர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.12.86 லட்சம் மோசடி  மர்ம நபர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.12.86 லட்சம் மோசடி  மர்ம நபர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வலை


ADDED : ஜூலை 20, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில், 5 பேரிடம் 12.86 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் போலியான வாட்ஸ் ஆப் குருப் ஆரம்பித்து, பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். அதை நம்பி அவர், ரூ.11.58 லட்சம் முதலீடு செய்தார். இதில் லாபத்தையும் எடுக்க முடியாமல் மர்ம நபரிடம் அவர் ஏமாந்தார்.

மேலும், நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ஹேமச் சந்திரன். இவர் இணையதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, ரூ.56 ஆயிரத்திற்கு லேப்டாப் ஆர்டர் செய்தார். பொருளை அனுப்பாமல் மர்ம நபர் ஏமாற்றினர்.

அதே போல, வினோபா நகரை சேர்ந்தவர் பிரிசில்லா, என்பவரும், வீட்டு பொருட்கள் வாங்க 42 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.

தொடர்ந்து, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் சையது சலீம், 13 ஆயிரம் ரூபாய், சாரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரியா, 17 ஆயிரம் ரூபாயை அனுப்பி மர்ம நபர்களிடம் ஏமாந்துள்ளனர்.

இதுகுறித்து, 5 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us