sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பா.ம.க.,வினருக்கு கறி விருந்து தங்கர்பச்சான் அசத்தல்

/

பா.ம.க.,வினருக்கு கறி விருந்து தங்கர்பச்சான் அசத்தல்

பா.ம.க.,வினருக்கு கறி விருந்து தங்கர்பச்சான் அசத்தல்

பா.ம.க.,வினருக்கு கறி விருந்து தங்கர்பச்சான் அசத்தல்


ADDED : ஏப் 29, 2024 04:04 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : கடலுார் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய பா.ம.க., தொண்டர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலுார் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிட்டார். இவர், பா.ம.க., தொண்டர்களுடன் கடும் வெயிலில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், குறிஞ்சிப்பாடியில் பா.ம.க., சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நேற்று திருமண மண்டபம் ஒன்றில் கூட்டம் நடந்தது. அதில் தங்கர்பச்சான், தேர்தலில் பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி, சாப்பாடு, சிக்கன் 65, சாம்பார், ரசம், பாயசத்துடன் பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த கறி விருந்து பா.ம.க., தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருந்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், கார்த்திகேயன், கடலூர் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி, மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாணவரணி தலைவர் கோபிநாத், முன்னாள் மாநில துணை செயலாளர் தர்மலிங்கம், நகர செயலாளர் நடராஜ், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us