ADDED : ஆக 18, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகளை காணவில்லை என தந்தை புகார் கொடுத்தை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகள் அபிநயா, 21. இவர் வீட்டில் இருந்தபடியே தொலைதுார கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானர். அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அமல்ராஜ் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அபிநயாவை தேடி வருகின்றனர்.