ADDED : மே 23, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முதலியார்பேட்டையில் மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்தார்.
முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர், ஜெயலட்சுமி. இவரது மகள் சரண்யா, 22; இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

