/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மது குடித்த போது வலிப்பு ஏற்பட்டு வெல்டர் இறப்பு
/
மது குடித்த போது வலிப்பு ஏற்பட்டு வெல்டர் இறப்பு
ADDED : ஏப் 11, 2024 03:44 AM
புதுச்சேரி: நண்பருடன் பாரில் மது குடித்த போது வலிப்பு நோய் ஏற்பட்டு வெல்டர் இறந்தார்.
திண்டினம் அடுத்த இலவளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், 38; வெல்டர். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் சேதராப்பட்டு பகுதியில் உள்ள மது பாரில் தனது நண்பருடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. உடன் அவரை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சை பெற்று, மேல், சிகிச்சைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

