ADDED : மே 01, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காரைக்கால் கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; புதுச்சேரி யூகோ வங்கி காவலர்.
இவரது வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள ஒரு மொபைல் எண்ணில் இருந்து ஆபாசமாக பேசி அடியோ அனுப்பட்டு இருந்தது.
இதையடுத்து ராஜ்குமார் அந்த எண்ணை குழுவில் இருந்து நீக்கினார். பின், அதே எண்ணில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்ட நபர், ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ராஜ்குமார் விசாரித்தபோது, அந்த நபர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நிஷாகன் என்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், நிஷாகன் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.