ADDED : மே 12, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முன்விரோதத்தில் எலக்ட்ரீஷியன் பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லுார் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமரன், 26; எலக்ட்ரீஷியன். இவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்கள் இடையே முன்விரோதம் உள்ளது.
அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. முத்துகுமரன் வீட்டு வாசலில் நின்ற அவரது பைக்கை, கத்தியால் வேட்டி சேதப்படுத்தினர். தட்டி கேட்ட முத்துகுமரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
முத்துகுமரன் புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அஜய் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.