sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் விடுதி அறையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்

/

தனியார் விடுதி அறையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்

தனியார் விடுதி அறையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்

தனியார் விடுதி அறையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்


ADDED : ஜூன் 16, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸ் அறையில் துாக்கு மாட்டிய அழுகிய நிலையில் இருந்த வாலிபர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆராத்திவேலுார், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஜயக்குமார், 30; திருமணம் ஆகாதவர். கடந்த 14ம் தேதி புதுச்சேரி வந்த விஜயக்குமார், உருளையன்பேட்டை அய்யனார் கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். ஒரு நாள் மட்டுமே தங்குவதாக கூறியவர் நேற்று வரை அறையை காலி செய்யவில்லை.

சந்தேமடைந்த கெஸ்ட் ஹவுஸ் நிர்வாகம், அறையில் உள்ள விஜயக்குமாரை அழைத்து வர ரூம் பாய் குமாரை அனுப்பினர். 3வது மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை. பூட்டப்படாமல் உள்ள அறையின் கதவை திறந்து பார்த்தபோது, விஜயக்குமார் மின் விசிறியில் துாக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

உடனடியாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப் பதிந்து விஜயக்குமார் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us