/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுக்குள் மாதிரி ஓட்டுப்பதிவு 'ஸ்கூபா' வீரர்கள் விழிப்புணர்வு
/
கடலுக்குள் மாதிரி ஓட்டுப்பதிவு 'ஸ்கூபா' வீரர்கள் விழிப்புணர்வு
கடலுக்குள் மாதிரி ஓட்டுப்பதிவு 'ஸ்கூபா' வீரர்கள் விழிப்புணர்வு
கடலுக்குள் மாதிரி ஓட்டுப்பதிவு 'ஸ்கூபா' வீரர்கள் விழிப்புணர்வு
ADDED : ஏப் 16, 2024 07:08 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் கடலுக்கடியில் மாதிரி ஓட்டுப்பதிவு மையம் அமைத்துவிழிப்பணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி 100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுமையாக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலில் மூழ்கி 100 சதவீத ஓட்டளிப்பு குறித்து ஆழ்கடலில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டக்குப்பம் பகுதியில், சென்னையை சேர்ந்த 6 ஆழ்கடல் நீர் மூழ்கி வீரர்கள் (ஸ்கூபா டைவிங்) மூலம், கடலுக்கடியில் சென்று, ஓட்டுப்பதிவு செய்வது போன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

