/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க கோரிக்கை
/
சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க கோரிக்கை
சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க கோரிக்கை
சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை காக்க கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 03:35 AM
புதுச்சேரி : சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை காத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில், விஷ வாயு கசிதலும், அடைப்பால் கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நிகழ்வு தொடர்கிறது.
'ஸ்மார்ட் சிட்டி'யின், மையப்பகுதியான செட்டித்தெரு போன்ற பிரதான வீதிகளிலும், கால்வாய் அடைப்பினால், 'மேன்ேஹால்' வழியே, அசுத்தமான, கழிவுநீர் வழிந்தோடி பொதுமக்கள் அவதியடைகின்றனர். மாணவ - மாணவியருக்கும், சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. சுற்றுலா பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதற்கு முக்கிய காரணம். சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை காத்திட, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.