/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
/
19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : மே 17, 2024 05:28 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வரும் 19ம் தேதி நடக்கும் சீதாராம கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை, இ.சி.ஆர், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சீதாராம கல்யாண மகோற்சவ சிறப்பு வழிபாடு, நாளை காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனையுடன் துவங்குகிறது.
மதியம் 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 3:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை 6:00 மணிக்கு திவ்ய நாம பஜனை நடக்கிறது. வரும், 19ம் தேதி காலை 7:30 மணிக்கு உஞ்சவிருத்தி, காலை 9:00 மணிக்கு, கல்யாண மகோற்வசம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு மேல், 12:00 மணிக்குள், சீதாபிராட்டிக்கும், ராமச்சந்திர மூர்த்திக்கும் சென்னை கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர் குழுவினரால், திருக்கல்யாண மகோற்சவம் நடத்தி வைக்கப்பட உள்ளது.
மதியம் 1:00 மணிக்கு, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு, வசந்த கேளிக்கை - பவ்வளிம்பு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தர்ம சம்ரக் ஷண சமிதி மேற்கொண்டுள்ளது.

