ADDED : மே 19, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, குமரன் நகரில் அமைந்துள்ள சிவகுரு உதவி மையத்தில் பக்தி சொற்பொழிவு, வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நடராஜன் தலைமை தாங்கி, சிவபெருமான் அடியாரிடம் அன்புகொண்டு கணவன், மனைவியின் பிரிவினை நீக்க மண்ணுக்குச் சிவனடியாராக வந்த நிகழ்வினை எடுத்து கூறினார்.
தலைநகர் தமிழ் மன்றத்தின் தலைவர் புதுவைக் கிருஷ்ணா ‘சிவமும் குருவும்’ தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மையத்தின் தலைவர் சந்திரசேகரன் ஆரத்தி வழிபாடு செய்தார்.
