ADDED : ஜூன் 01, 2024 04:03 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம், : முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. கடந்த 27ம் தேதி கரக திருவிழா நடந்தது. 28ம் தேதி பகாசூரன் வதம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் படுகள நிகழ்ச்சி நடந்தது. முக்கிய விழாவாக நேற்று மாலை 6:00 மணியளவில், தீமிதி திருவிழா நடந்தது. பக்தர்கள் தீமிதித்து, அம்மனை வழிபட்டனர். திரளான பக் தர்கள் கலந்து கொண்டனர்.
