ADDED : ஜூன் 19, 2024 05:23 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : பள்ளிச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
மதகடிப்பட்டு அடுத்த பள்ளிச்சேரி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்து வருகிறது. நாளை இரவு 8.00மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், 21ம் தேதி மாலை 5.00 மணிக்கு தீமிதி உற்சவமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பள்ளிச்சேரி கிராமமக்கள் செய்துள்ளனர்.
