தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் துவக்கம்

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் துவக்கம்

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் துவக்கம்


ADDED : மே 15, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு கங்கையம்மனுக்கு பால் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

வரும் 27ம் தேதி காலை 10;00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு கரகம் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகாசசூரன் வதம், 29ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அர்ஜுனன்-திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம், இரவு 7:00 மணிக்கு மேல், முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

வரும் 31ம் தேதி பகல் 12 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மணிமாறன், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us