sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

23ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வள துறை இயக்குனர் எச்சரிக்கை

/

23ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வள துறை இயக்குனர் எச்சரிக்கை

23ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வள துறை இயக்குனர் எச்சரிக்கை

23ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீன்வள துறை இயக்குனர் எச்சரிக்கை


ADDED : மே 21, 2024 04:55 AM

Google News

ADDED : மே 21, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் வரும் 23ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மீன் வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிக்கையின் படி வளிமண்டலத்தில் தென்மேற்கில் இருந்து காற்றின் வேகம் 20 நாட்டிகல் வேகத்திற்கு அதிகரித்துள்ளது.மேலும் மற்ற வானிலை நிகழ்வுகளால் தென்மேற்கு பருவமழை அந்தமான், மாலத்தீவு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக மே 20 ந் தேதி முதல் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகின்றது.வரும் 23ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

எனவே, வட தமிழக கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கட்டுமர மீன்பிடி மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.

மீன்பிடி விசைப்படகுகள், மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் மற்றும் சுருக்கு வலை மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி தடை காலம் என்பதால் அவர்களுக்கு தடை ஏற்கனவே அமலில் உள்ளது.

ஆகவே புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் வரும் 23ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us