sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

21, 22 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத் துறை இயக்குனர் எச்சரிக்கை

/

21, 22 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத் துறை இயக்குனர் எச்சரிக்கை

21, 22 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத் துறை இயக்குனர் எச்சரிக்கை

21, 22 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத் துறை இயக்குனர் எச்சரிக்கை


ADDED : மே 19, 2024 03:15 AM

Google News

ADDED : மே 19, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, மீன்நலத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மீன்நலத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 21 மற்றும் 22 ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

ஏற்கனவே விசைப்படகுகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகளுக்கு மீன்பிடி தடை காலம் என்பதால் அவர்களுக்கு தடை ஏற்கனவே அமுலில் உள்ளது. இந்த அறிவிப்பு முக்கியமாக பாராம்பரிய இயந்திரம் பொருத்தப்படாத கட்டு மரங்களுக்கு பொருந்தும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us