sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 30, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 05:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசினை கண்டித்து புதுச்சேரி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி வரவேற் றார். கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கின்ற வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்குமரவேல், லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், சக்திவேல், தங்கவேலு, வேலவன், சண்முகம், தர்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us