ADDED : மார் 04, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தலைக்கு தேய்க்கும் ஷாம்பை குடித்த முதியவர் இறந்தார்.
தவளக்குப்பம் ரோகினி நகரை சேர்ந்தவர் ராமதாஸ், 68; இவர், கீழே தடுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து, மருத்துவ சிகிச்சை பெற்றார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி வீட்டில் வைத்திருந்த தலைக்கு தேய்க்கும் ஷாம்பை, தவறுதலாக எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.